மாதாந்திர நிகழ்வுகள்
*கவிமாலை மாதாந்திரச் சந்திப்பு – கவிதைப்போட்டியின் விதிமுறைகள்*
1. கவிதை 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும் மரபுக் கவிதைகள் என்றால் அடிகள் கணக்கில் கொள்ளப்படாது. வரிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணத்திற்கு விருத்தம் என்றால் இரண்டு கண்ணிகளும், வெண்பா என்றால் நான்கு கண்ணிகளும் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
2. போட்டியில் பங்கேற்போர் சிங்கப்பூரில் வசிக்க வேண்டும். கவிமாலை சந்திப்பில் கலந்துகொள்பவர்களுக்கே பரிசு வழங்கப்படும்.
3. போட்டிக்கவிதைகளில் சந்திப்பிழை, எழுத்துப்பிழை உள்ளிட்ட பிழைகளை முற்றிலுமாக தவிர்க்கவும். போட்டிக்கு அனுப்பும் முன்னர் தங்கள் கவிதையை பிழை பார்த்துத் திருத்தி பிழையின்றி அனுப்பவும்.
4.போட்டிக்கவிதைகள் கருப்பொருள் மொழிவளம், படைப்பாக்கத் திறன் மற்றும் புதிய சிந்தனை ஆகியவற்றின் கீழ் மதிப்பிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
5. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்.
6.கவிதைகளை WORD மற்றும் PDF ஆகிய இரண்டு வடிவிலும் அனுப்பவும். புகைப்படம் எடுத்து அனுப்புதல் அல்லது JPEG வடிவங்கள் தவிர்க்கவும்.
7. போட்டிக்கு நீங்கள் அனுப்பும் கவிதையுடன் உங்கள் பெயரையும், தொடர்பு எண்ணையும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.
8. போட்டிக்கு வரும் கவிதைகளைக் கவிமாலையின் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பயன்படுத்திக் கொள்ள கவிமாலைக்கு முழு உரிமை உண்டு.
கவிதைகள் அனுப்ப வேண்டிய முகவரி :
poems@kavimaalai.com
மரபுக்கவிதைக்கான முதல் பரிசு – 50 வெள்ளி
வழங்குபவர் திரு. அருமைச்சந்திரன், தலைவர்,
சிங்கப்பூர் தமிழ் பட்டிமன்றக் கலைக்கழகம்
முதல் பரிசு – 50 வெள்ளி
வழங்குபவர் திரு.இரத்தின வேங்கடேசன், தலைவர்,
சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம்
இரண்டாம் பரிசு – தலா 30 வெள்ளி * மூவருக்கு
வழங்குபவர் திரு ஹனிபா, உரிமையாளர்,
ஹனிபா டெக்ஸ்டைல்ஸ்
மூன்றாம் பரிசு – தலா 20 வெள்ளி * மூவருக்கு
வழங்குபவர் திரு.ஜெகதீஷ், உரிமையாளர்,
JVKM & Mitra குழுமம்
தங்களது கவிதைகளை எதிர்நோக்கி..
நன்றி
கவிமாலை