ஒரு தொற்றுக் காலத்தின் தேய்பிறை இருப்பு
ஒலியறு இரவில் கவியும் பால்நிறப் படிமம்
இருண்ட அலைபேசித் திரைச் சாலையில்
எப்போதேனும் ஒளிர்ந்தடங்கும் அகால ஊர்தி
ஓயாது கடையும் காற்றாடி உறுமலில்
திரண்டு புழுங்கும் தனியுடல் வெம்மை
அரவமற்ற தாழ்வாரக் குழல்விளக்கில்
எரியும் கைவிடப்பட்ட காலத்தின் மௌனம்
போர்த்தப்பட்ட பியானோவில் மூச்சடைத்து நிற்கும்
உரையாடலற்ற பொழுது
உன் வானத்திலிருந்து அருளும் சிறுதுளி போதும்
இலைகளெங்கும் துளிர்க்கும் என் இரவுமரம்