இதோ
நினைவில் பறவையுள்ள
கைவிடப்பட்ட கூடெனக் கரைகிறேன்.
நினைவுகள் பூத்துதிரும்
ஏதேனுமொரு கிளையில்
வந்தமர்.
அல்லினமைதி அச்சமூட்டுகிறது.
உன் சேகரங்களால் கட்டமைக்கப்பட்ட
என் சுள்ளியுடலுள்
நீயுதிர்த்துச் சென்ற
தூவல் சொல்லொன்றைக்
கவனமாகக் கைப்பிடித்துக் காத்திருக்கிறேன்.
கார்காலத்தின் முதல் துளிக்குமுன் திரும்பிவிடு