கவிமாலை 204 | பிப்ரவரி 2017

0
393

 
பிப்ரவரி மாதக் கவிமாலையில் சித்துராஜ் பொன்ராஜ் சிறப்புரை.
 
ஜாலான் புசார் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் கவிமாலை சிங்கப்பூர், கவிஞர்கள் சந்திப்பை நடத்தி வருகிறது
 
204-ஆவது மாதச் சந்திப்பான, இந்த பிப்ரவரி மாதக் கவிமாலைச் சந்திப்பு வரும் 25. 02. 2017 சனிக்கிழமை அன்று மாலை சரியாக 7 மணிக்கு ஜாலான் புசார் சமூக மன்றத்தின் பின்புறமுள்ள தற்காலிக விலாசமான கிங்க் ஜார்ஜ் அவன்யூ புளோக் 804-இன் மூன்றாவது தளத்தில் உள்ள (சிங்கப்பூர்-200804)  அரங்கத்தில் நடைபெறும்
 
வழமை போல்மனதில் நின்ற கவிதைகள்”, அதைத் தொடர்ந்து வடித்ததில், படித்ததில் பிடித்தது அங்கம் நடைபெறும்பிப்ரவரி மாதக் கவிதைப் போட்டியில் வெற்றிபெற்ற கவிதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
 
2016-ல் கதை கவிதை என்ற இரு பிரிவிலும் சிங்கப்பூர் இலக்கியப் பரிசினை வென்ற எழுத்தாளர்  திரு சித்துராஜ் பொன்ராஜ் அவர்கள் ‘கவிதையில் பின் நவீனத்துவம்’ என்னும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுவார்.
 
கவிஞர்கள் மார்ச்சு மாதத்திற்கான கவிதைப் போட்டிக்காகக் கொடுக்கப்பட்டயாக்கை திரிஎன்ற தலைப்பில் கவிதைகளை இயற்றி வருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
 
தமிழ்க் கவிஞர்கள், ஆதரவாளர்கள், இதனையே அழைப்பாகக் கருதி அனைவரும் வருகை தந்து பயனடைய அன்புடன் வேண்டுகிறோம்.
             
தகவலுக்கு 9853 6465 / 85960076