போட்டிக் கவிதை

மாதாந்திரக் கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள்

1. கவிதை 16 வரிகளுக்குள் இருக்க வேண்டும் மரபுக் கவிதைகள் என்றால் அடிகள் கணக்கில் கொள்ளப்படாது. வரிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். உதாரணத்திற்கு விருத்தம் என்றால் இரண்டு கண்ணிகளும், வெண்பா என்றால் நான்கு கண்ணிகளும் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

2. போட்டியில் பங்கேற்போர் சிங்கப்பூரில் வசிக்க வேண்டும். கவிமாலை சந்திப்பில் கலந்துகொள்பவர்களுக்கே பரிசு வழங்கப்படும்.

3. போட்டிக்கவிதைகளில் சந்திப்பிழை, எழுத்துப்பிழை உள்ளிட்ட பிழைகளை முற்றிலுமாக தவிர்க்கவும். போட்டிக்கு அனுப்பும் முன்னர் தங்கள் கவிதையை பிழை பார்த்துத் திருத்தி பிழையின்றி அனுப்பவும்.

4.போட்டிக்கவிதைகள் கருப்பொருள் மொழிவளம், படைப்பாக்கத் திறன் மற்றும் புதிய சிந்தனை ஆகியவற்றின் கீழ் மதிப்பிடப்படும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது

5. ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம்

6.போட்டிக்கு வரும் கவிதைகளைக் கவிமாலையின் அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் பயன்படுத்திக் கொள்ள கவிமாலைக்கு முழு உரிமை உண்டு